அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்… பா.ஜ.கவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை:
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மாவட்ட தலைமையால் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், தினேஷ் ரோடியின் பொறுப்பை பறித்து நேற்றிரவு 9 மணிக்கு அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் தினேஷ் ரோடி, தொடர்ந்து அதே பொறுப்பில் நீடிக்கப்படுகிறார். இரவு 9 மணிக்கு பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை எரித்ததால் நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா?. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது. அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்.
பாஜகவினரை போல் அதிமுகவில் கிளர்ச்சி அடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது எனவும் கூறினார்.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்… பா.ஜ.கவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக