அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுடன் சந்திப்பு….!

காசா: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணமாக வந்தார். அதன்பின் அவர் பாலஸ்தீன அதிபர் மஹுமுத் அப்பாஸை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது காசா பகுதியில் இஸ்ரேஸ் நடத்திய இனப்படுகொலைகள் குறித்து அப்பாஸ், பிளிங்கனிடம் விவரித்தார். இந்தநிலையில் காசாவாசிகள் கட்டாயமாக வெளியேற்றப்படக்கூடாது என்று அமெரிக்க அமைச்சர் பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் தெரிவித்தார். மேலும் இருவரும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அதித வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விவாதித்தனர் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்திவ் மில்லர் தெரிவித்தார். இதனிடையே ஹமாஸ் தீவிரவாத குழுவுடன் நடந்து வரும் போரில் காசா பகுதியில் அணுகுண்டு வீசுவதுதான் இஸ்ரேலின் விருப்பம் என்று அந்நாட்டின் அமைச்சர் அமிசாய் எலியாகு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எலியாகுவின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எலியாகுவின் பேச்சு அடிப்படை உண்மைக்கு மாறாகயுள்ளது. அப்பாவிகளுக்கு தீங்கு செய்யாமல், சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்ரேலும் ஐடிஎஃப்-ம் செயல்படுகின்றன. எங்களின் இறுதி வெற்றி வரை நாங்கள் அதைத் தொடருவோம் என்று தெரிவித்தார்.

எலியாகுவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான யார் லாபிட், பொறுப்பற்ற அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் கடந்த மாதத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை கண்டித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, “இத்தகைய கொடூரமான தாக்குதலை எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாது என கூறினார். மேலும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை சுட்டிக்காட்டிய ஒபாமா, யாருடைய கரங்களும் சுத்தமில்லை” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், இஸ்ரேல் -ஹமாஸ் போர் ஞாயிற்றுக்கிழமை 30-வது நாளை எட்டியுள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி தாக்குதல் தொடங்கியது முதல் பாலஸ்தீன பகுதியில் இதுவரை 9,770 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 4,800 பேர் குழந்தைகள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுடன் சந்திப்பு….!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.