அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுடன் சந்திப்பு….!

காசா: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணமாக வந்தார். அதன்பின் அவர் பாலஸ்தீன அதிபர் மஹுமுத் அப்பாஸை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது காசா பகுதியில் இஸ்ரேஸ் நடத்திய இனப்படுகொலைகள் குறித்து அப்பாஸ், பிளிங்கனிடம் விவரித்தார். இந்தநிலையில் காசாவாசிகள் கட்டாயமாக வெளியேற்றப்படக்கூடாது என்று அமெரிக்க அமைச்சர் பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் தெரிவித்தார். மேலும் இருவரும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அதித வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விவாதித்தனர் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்திவ் மில்லர் தெரிவித்தார். இதனிடையே ஹமாஸ் தீவிரவாத குழுவுடன் நடந்து வரும் போரில் காசா பகுதியில் அணுகுண்டு வீசுவதுதான் இஸ்ரேலின் விருப்பம் என்று அந்நாட்டின் அமைச்சர் அமிசாய் எலியாகு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எலியாகுவின் இந்த பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, எலியாகுவின் பேச்சு அடிப்படை உண்மைக்கு மாறாகயுள்ளது. அப்பாவிகளுக்கு தீங்கு செய்யாமல், சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்ரேலும் ஐடிஎஃப்-ம் செயல்படுகின்றன. எங்களின் இறுதி வெற்றி வரை நாங்கள் அதைத் தொடருவோம் என்று தெரிவித்தார்.

எலியாகுவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான யார் லாபிட், பொறுப்பற்ற அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் கடந்த மாதத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை கண்டித்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, “இத்தகைய கொடூரமான தாக்குதலை எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாது என கூறினார். மேலும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை சுட்டிக்காட்டிய ஒபாமா, யாருடைய கரங்களும் சுத்தமில்லை” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், இஸ்ரேல் -ஹமாஸ் போர் ஞாயிற்றுக்கிழமை 30-வது நாளை எட்டியுள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி தாக்குதல் தொடங்கியது முதல் பாலஸ்தீன பகுதியில் இதுவரை 9,770 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 4,800 பேர் குழந்தைகள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுடன் சந்திப்பு….!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65