சென்னை :
சிறைவாசிகள் தொலைபேசி மூலமாக தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. சிறைவாசிகள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கான நேரத்தையும் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சிறைவாசிகள் இனி மாதத்துக்கு 8 முறைக்கு பதில் 10 முறை உறவினர், குடும்பத்தினருடன் பேசலாம். சிறைவாசிகள் இனி மாதத்துக்கு 56 நிமிடங்களுக்கு பதில் 120 நிமிடம் வரை தொலைபேசியில் பேசலாம் என தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





