இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னை வருகை

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை நடக்கிறது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
இன்று பிற்பகல் 2.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் அவருக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரசார் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மல்லிகார்ஜுன கார்கே 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அன்று இரவு சென்னையில் தங்குகிறார். 2ம் நாள் காலை 9.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்.

அங்கு நெடுஞ்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட இந்திரா காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னை வருகை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு