புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ‘சர்வதேச குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) பொருளாதார வகைப்பாட்டிற்கு உட்பட்ட நிறுவனங்களாக இருப்பதுடன், அவை முதல் தலைமுறை தொழில்முனைவோரின் துணிச்சல், இளைஞர்களின் லட்சியங்கள், பெண் தொழில்முனைவோரின் உறுதிப்பாடு, சவால்களை வாய்ப்புகளாக மாற்றியமைத்துள்ள லட்சக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்களின் மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றன என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், ஆற்றல்மிக்க எம்எஸ்எம்இ துறையால் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தொழில்முனைவோர் பயணத்தில் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர், பட்டப்படிப்பை முடித்த பிறகு, தனது தந்தையின் நிதி உதவியுடன் ஒரு சிறிய ஆடை விற்பனையகத்தைத் தொடங்கியதாகக் கூறினார். தொடக்க காலத்தில் எதிர்கொண்ட சவால்களை நினைவுகூர்ந்த அவர், விடாமுயற்சி, தொடர்ச்சியான கற்றல், கடின உழைப்பு ஆகியவை பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒரு முன்னணி பின்னலாடை ஏற்றுமதி வணிகத்தை உருவாக்க தனக்கு உதவியதாகக் கூறினார். தொடக்ககாலத் தடைகளைக் கண்டு ஒருபோதும் மனச்சோர்வடைய வேண்டாம் என்றும், தொழிலைக் கற்றுக்கொள்வதில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்றும், இளம் தொழில்முனைவோரை அவர் கேட்டுக் கொண்டார்.தேங்காய் நார் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அத்துறை குறித்து தனக்கு பெரிய அளவில் ஞானம் இல்லை என்ற போதிலும், அத்துறையின் ஒவ்வொரு அம்சத்தையும் புரிந்துகொள்வதில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாகக் கூறினார். ஏற்றுமதியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாலும், லட்சிய இலக்குகளை நிர்ணயித்ததாலும், அத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்ததாக அவர் தெரிவித்தார். சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன், கடினமாக உழைத்து, றை சார்ந்த அனைத்தையும் கற்றுக்கொண்டால், வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும்,” என்று அவர் கூறினார்.

தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளை எதிர்காலத்தில் உலகின் எரிசக்தி மையமாக நிலைநிறுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சி குறித்த ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட, சமத்துவ, நீடித்த உலகளவிலான எதிர்கால எரிசக்தி மையமாக, உலகின்





