சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில் 25.03.2026 அன்று மாலை 4 மணியளவில் கோட்ட அளவிலான அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.அஞ்சல் துறையின் சேவைகள் தொடர்பான குறைகளை முதன்மை அஞ்சல் அதிகாரி விசாரிக்க உள்ளார்.வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை சென்னை அண்ணாசாலை தலைமைத் தபால் நிலையத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரிக்கு 25.03.2026க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர் தொடர்பான புகார்களை அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும்.புகார்களை நேரிலோ அல்லது தபாலிலோ அல்லது annaroadho@indiapost.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அனுப்ப வேண்டும். புகார்கள் அடங்கிய தபால் உறையின் முன்பக்க மேற்பகுதியில் அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் என்று குறிப்பிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில் 25.03.2026 அன்று மாலை 4




