சந்திரயான்-3 :: 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி…

பெங்களூரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சந்திரயான்-3 திட்டம் அட்டவணைப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில், இஸ்ரோவில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தினை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது. இதேபோன்ற, பூமிக்கு அருகே அடுத்த சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வருகிற 20-ந்தேதி பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் நடைபெறும் என தெரிவித்து உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ந்தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தொலைவை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தினை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் அப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது என பதிவிட்டது. இதனை தொடர்ந்து, 2-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி நேற்று நடந்தது. இதன்படி, விண்கலம் 41,603 கி.மீ. x 226 கி.மீ. உயரத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து, 3-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்கு இடையே நடந்தது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

சந்திரயான்-3 :: 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி