ஆவடி:
சென்னை ஆவடியை அடுத்த மோரை திருமலை நகரில் சமூக சேவகர் அலாட் ஆறுமுகம் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ரேவதி ஆறுமுகம் தலைமை தாங்கினார். திமுக நிர்வாகிகள் பிரகாஷ், தளபதி ஆகியோர் சார்பில் அலாட் ஆறுமுகத்திற்கு ஆள் உயர மாலை மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக சேவகர் அலாட் ஆறுமுகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜி, ஜெயபால், பிரகாஷ், ரஞ்சித், ராமு மற்றும் திமுக நிர்வாகிகள் செல்லா, சேகர், குமார், சமூக சேவகர்கள் கார்த்திக், ஜெயராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரூ.1லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி: முதல்வர்
சென்னை:தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் விதி எண் 110 -கீழ் விவசாயிகளுக்கான






