“கார்டுல தள்ளுனீங்களே அது என்னது”: போதை பொருள் குறித்து அமைச்சர் சரத்திடம் கே.என்.நேரு கேள்வி

சென்னை:
4 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில் போதை பொருள் கும்பலால் கோவை மாணவர் அமுதன் கொலை உள்பட போதைப் பொருளால் ஏற்படும் கொலைகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இது ஆளும் தவெக கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதமாக மாறியது.
இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, அமைச்சர் சரத், ஐபிஎஸ் மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத், “இதற்கான விளக்கத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் நேரு, “கேள்வி கேட்டா உங்களைப்பற்றி சொல்லுங்க. கார்டுல தள்ளுனீங்களே அது என்னனு சொல்லுங்க” என்றார்.

விஐடி நிறுவனர், மல்லை சத்யாவுக்கும் பைபிள் ஒளியில் திருக்குறள் அறத்துப்பால் விளக்க புத்தகம் வழங்கல்

சென்னை:வி.ஐ.டி. நிறுவன தலைவரும், முனைவருமான விசுவநாதனை இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்க தலைவர்

“கார்டுல தள்ளுனீங்களே அது என்னது”: போதை பொருள் குறித்து அமைச்சர் சரத்திடம் கே.என்.நேரு கேள்வி

விஐடி நிறுவனர், மல்லை சத்யாவுக்கும் பைபிள் ஒளியில் திருக்குறள் அறத்துப்பால் விளக்க புத்தகம் வழங்கல்

சென்னை:வி.ஐ.டி. நிறுவன தலைவரும், முனைவருமான விசுவநாதனை இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்க தலைவர்