சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி… ஓ.பன்னீர்செல்வத்துக்கு மறுப்பு

சிவகங்கை:
சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சிவகங்கையில் வரும் நாளை (சனிக்கிழமை) அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதேநாளில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.
ஒரேநாளில் இரு தரப்பும் தனித்தனியே நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரியது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. மாலை 6 மணிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க சிவகங்கை டிஎஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
அதிமுகவின் ஒருபிரிவினர் பொதுக்கூட்டம் நடத்தும் அதேநாளில் , ஓபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றொரு நாளில் போராட்டத்திற்கு அனுமதி கோரும் பட்சத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் பட்சத்தில் கட்சி நிர்வாகிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி… ஓ.பன்னீர்செல்வத்துக்கு மறுப்பு

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –

புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,

விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் பேசுகையில், விருத்தாச்சலத்தை மாவட்டமாக

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்