சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள ஏவுகணை உள்நாட்டுலேயே தயாரிப்பு…!

வெகு விரைவில் இந்திய ராணுவத்தில் பாகிஸ்தான், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் புதிய பிரலே ஏவுகணை சேர்க்கப்பட இருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பிரலே ஏவுகணை. தரையிலிருந்து செலுத்தக் கூடிய ஏவுகணையான ‘பிரலே’ ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை 150 மீட்டர் தொலைவில் இருந்து 500 மீட்டர் வரை எதிரிகளின் இலக்கை குறிவைத்து தாக்கி அழிக்கக் கூடியது திறன் கொண்டது. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை எல்லையில் பாகிஸ்தான், சீனாவின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இந்த இருநாடுகளின் எல்லையில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இது இந்திய ராணுவத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

சீனாவின் டாங் பெங் 12, ரஷ்யாவின் இஸ்கந்தர் ஏவுகணைகளைப் போன்று வலுவானது. ரஷ்யா இந்த ஏவுகணையைத் தான் தற்போது உக்ரைன் உடன் நடக்கும் போரில் பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தானும் எதிரி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை வைத்துள்ளது.

பிரலே ஏவுகணை சோதனை எந்தவித இடையூறும், தொழில்நுட்பக் கோளாறும் இன்றி இலக்கை நோக்கி வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. இதில் வெற்றியும் கிடைத்துள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரலே ஏவுகணையின் பாதையானது கடற்கரையோரத்தில் உள்ள கண்காணிப்பு கருவிகள் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அதன் இலக்கு மற்றும் செயல்திறனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரலே ஏவுகணை 350-500 கிமீ குறுகிய தூர ஏவுகணை. இது 500-1,000 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள ஏவுகணை உள்நாட்டுலேயே தயாரிப்பு…!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட