சென்னை பல்லாவரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக வந்த அந்த கொகுசு கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துக்காக நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். உடனே படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சொகுசு கார் ஓட்டுநரை கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கேரளாவை சேர்ந்த ரஞ்சித் என்பவர் அதிவேகமாக காரை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக சொகுசு காரை ரஞ்சித் இயக்கியதால் விபத்து என விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






