மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா பேஜனா திட்டம் 2.0 ஒருங்கிணைந்து புதுப்பித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ் பொருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுகாதாரம் சங்கர்லால் குமாவத் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சண்முககனி மற்றும் உயர் உலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






