“தமிழகத்தில் 90 ரயில் நிலையங்கள் சர்வதேச தரம்” ரயில்வே அமைச்சர் தகவல்

சென்னை:
தமிழகத்தில் உள்ள 90 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பாரம்பரியமிக்க நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள புதிய மின்சார ரயில் இன்ஜின் மற்றும் ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளையும் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரயில்வே துறையில் பல்வேறு வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பழைய நீராவி இன்ஜின் என்பது பலரின் நினைவாக உள்ளது. இந்தியாவில் அறிவியல் சார்ந்த வளர்ச்சி ஒரு புறம் ஏற்பட்டு வந்தாலும் நம்முடைய பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில் நீராவி இன்ஜின் வடிவில் புதிய மின்சார ரயில் அமைக்கப்பட்டு உள்ளது.
மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ள பெரம்பூர் மற்றும் ஆவடி ரயில்வே அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பு அங்கீகாரம் இந்த ரயிலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2 முதல் 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த ரயில் பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
எந்த பகுதிகளில் இயக்க உள்ளோம் என்பது குறித்து முடிவு செய்யவில்லை. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை செய்ய உள்ளோம். ரயில்வே வளர்ச்சிக்காக 2014ம் ஆண்டு வரை சராசரியாக தமிழகத்திற்கு ரூ.870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ரூ.6017 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
அதன் காரணமாகவே தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டு 90 ரயில் நிலையங்கள் தமிழகத்தில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை வாரத்திற்கு ஒரு புதிய ரயிலை உருவாக்கி வருகிறோம் என்றார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

“தமிழகத்தில் 90 ரயில் நிலையங்கள் சர்வதேச தரம்” ரயில்வே அமைச்சர் தகவல்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத