திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று. (குறள்: 150)

விளக்கம்:
அறத்தைத் தனக்குரியதாகக் கொள்ளாமல் தீவினைகளைச் செய்துவருவானாயினும் பிறனுக்குரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. விரும்பினால் அவன் கொலை செய்யப்படுவது உறுதி. மற்ற தீவினைகளின் பயன் இவனுக்குச் சேர்வதற்கு முன்பு இந்தத் தீவினையின் பயன் உடனே வந்து சேரும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்