கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
குறள் விளக்கம்: நினைப்பவர் உள்ளமாகிய மலரில் அமரும்
இறைவனின் மாண்புமிகுந்த அடிகளை உள்ளத்தில் கொண்டிருப்பவர் இம்மையிலும் மறுமையிலும் நிலை பெற்று வாழ்வர் (நிலம் இம்மை, மிசை மறுமை)
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் இறைவன் ஈசன் எனும்
இயேசு மத்தேயு கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான். தேடுகிறவள் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்’ எனவும். யோவான் 11:25 ‘நானே உயித்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்தி இறைவனை வழிபடுவதின் வழி இம்மை மறுமை எனும் இருவேறு உலகத்தும் நீடு வாழ்வைப் பெறுவர் என விளக்குவதை அறியலாம்.






