சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை பார்த்து வந்த ராஜன் என்பவர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர. திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த அவர், திடீரென மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் எழும்பூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் ராஜனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கம் போல் பணிக்கு வந்த ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைப்பளு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





