நீங்க 10, பிளஸ் 2 பாஸா? ரூ.81,000.. சம்பளத்தில் அரசு வேலை

டெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறை மற்றும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள 1,600 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி எனும் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 10, பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதிகபட்சமாக மாதம் ரூ.81 ஆயிரம் வரை சம்பளம்பெற முடியும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள், தீர்ப்பாயங்கள் உள்பட வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்களை எஸ்எஸ்சி (Staff Selection Commission or SSC) எனும் பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதுதவிர சென்னை, பெங்களூர் உள்பட 7 இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. அந்த வகையில் தற்போது பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் 1,600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிகள் லோவர் டிவிஷன் கிளர்க்/ஜூனியர் உதவி செயலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு ஏ) உள்ளிட்ட 3 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. இதில் லோவர் டிவிஷன் கிளர்க்/ஜூனியர் உதவி செயலாளர் பணிக்கு மாதம் ரூ.190,00 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். டேட்டோ என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.9,300 வரையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு ஏ) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10 அல்லது 12ம் வகுப்பு மட்டுமே முடித்திருந்தால் போதும். விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 01.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த பணிக்கு ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினரக்கு 10 முதில் 15 வயது வரையும் தளர்வு உண்டு.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://ssc.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜூ/ன் மாதம் 8 ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கம்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறி தேர்வு, டைப்பிங் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள் என பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

நீங்க 10, பிளஸ் 2 பாஸா? ரூ.81,000.. சம்பளத்தில் அரசு வேலை

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்