நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடியின் பெயரா? நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் மறுப்பு

புதுடெல்லி:
அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர், நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடி முக்கிய போட்டியாளராக உள்ளார் என்று அஸ்லே டோஜே தெரிவித்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் தாம் மோடியின் மிகப்பெரிய ரசிகர் என்று அஸ்லே டோஜே கூறியதாகவும் பதிவில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்த தகவலை அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இது பொய்யான செய்தி என்றும் இது போன்ற செய்திக்கு நாம் கை, கால், மூக்கு வைக்கக் கூடாது என்றும் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். அஸ்லே டோஜே அளித்த பேட்டியில் உக்ரைன் விவகாரத்தில் மோடிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அஸ்லே டோஜே, மோடியின் நிலைப்பாட்டை பாராட்டி பேசி இருந்தார். உக்ரைன் விவகாரத்தில் மோடியை பற்றி நோபல் பரிசு தேர்வுக் குழு தலைவர் பாராட்டி பேசிய வார்த்தைகளை கொண்டு நோபல் பரிசு போட்டியாளர்களில் மோடி முதன்மையானவராக உள்ளார் என்று ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு இருப்பதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடியின் பெயரா? நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் மறுப்பு

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்