பள்ளி மாணவர்கள் படிப்பை தவிர்த்து வேறு பணிகளில் ஈடுபடக்கூடாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பேட்டி

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கிருஷ்ணப்பிரியா கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ஆர்.அறிவழகன், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தாபோது கூறியதாவது :

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புறங்களை அதிகம் கொண்ட பகுதியாகும். முதலில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி வளாகங்களுக்கு கொண்டு வருவது முதல் வேலை. எந்தவொரு படிப்பையும் தவிர்த்து வேறு பணிகளில் ஈடுபடக்கூடாது. அதுபோன்று பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது எனது முதல்பணி. 2-வது 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும். முதலிடம் பெறுவது என்பதைவிட எந்தவொரு மாணவ- மாணவியும் தேர்ச்சி பெறாமல் இருக்கக்கூடாது.

ஏனென்றால் ஒரு மாணவன் தோல்வி அடைந்துவிட்டால் அவனது வாழ்க்கை பாதை தவறான பாதையாகி விடும். தேர்ச்சி பெற்று விட்டால் அவர்களின் பாதை நேர்பாதையாக சென்றுவிடும். ஆகவே வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும். அதேபோல் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவ- மாணவிகளுக்கு விடுபடாமல் கொண்டு சேர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சிறந்த நிலையை அடையும் வரும் கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது எனது முதல் பணி. இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை. வரும் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் ஒரு சிறந்த நிலையை அடையும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

பள்ளி மாணவர்கள் படிப்பை தவிர்த்து வேறு பணிகளில் ஈடுபடக்கூடாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பேட்டி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத