ரூ.40,000/- ஊதியத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Project Engineer – I, Project Officer – I, Trainee Engineer – I பணிக்கென காலியாக உள்ள 30 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B. Tech/ B.Sc. Engineering / MBA, MSW, PG Degree / PG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC-NCL விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் PwBD பிரிவில் 40%க்கு மேல் ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

Project Engineer/ Officer – I

1st Year – Rs. 40,000 /- PM
2nd Year – Rs. 45,000/- PM
3rd Year – Rs. 50,000/- PM
4th Year – Rs. 55,000/- PM
Trainee Engineer–I

1st Year – Rs. 30,000 /- PM
2nd Year – Rs. 35,000/- PM
3rd Year – Rs. 40,000/- PM

விண்ணப்ப கட்டணம்:
Project Engineer / Officer – I – Rs.472/-
Trainee Engineer – I – Rs.177/-

SC, ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.03.2023ம் தேதிக்குள் எழுத்து தேர்வுக்கான முன்பதிவு செய்யாதவர்களால் எழுத்து தேர்வில் கலந்துகொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

ரூ.40,000/- ஊதியத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு