ஒரே நாடு ஒரே தேர்தல் அதிமுக ஆதரிக்கும் : எடப்பாடி பழனிசாமி !

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் 2018ம் ஆண்டு அப்போதைய சூழலை கொண்டு அதிமுக எதிர்த்தது. ஆனால் தற்போதைய சூழலில் ஆதரிக்கிறது’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதன்பிறகு சரி.. மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக.

எங்களை யாரும் குறை சொல்ல முடியாது. தற்போது உதயநிதி சனாதனத்தை பேசும் பொருளாக மாற்றியுள்ளார். இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவது குறித்து கேட்கிறீர்கள். அது தொடர்பான விவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு நான் பதில் அளிப்பேன். பல்லடம் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் 2018ம் ஆண்டு அப்போதைய சூழலை கொண்டு அதிமுக எதிர்த்தது. தற்போதைய சூழலில் அதனை ஆதரிக்கிறது. சீமான் என்ன பேசுகிறார் என்பது எங்களுக்கு தெரியாது என்றார் எடப்பாடி பழனிசாமி.

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

ஒரே நாடு ஒரே தேர்தல் அதிமுக ஆதரிக்கும் : எடப்பாடி பழனிசாமி !

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு