சென்னை தி.நகர் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை:
சென்னையில் காலையில் கடுமையான வெயில், இரவில் பலத்த காற்றுடன் மழை என்கிற நிலை உருவாகியுள்ளது. தற்போது சென்னையை சுற்றி மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இயந்திரங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டப்படுகிறது.
இந்தநிலையில் முக்கிய கடைவீதியாக திகழும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்னை தியாகராயா நகரில் மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தி.நகரின் முக்கிய சாலைகளான கோபதி நாராயணா சாலை மற்றும் சர் தியாகராய சாலைகளை இணைக்கும் வகையில் டாக்டர் நாயர் சாலை உள்ளது. இந்த சாலையுடன் கோபாலகிருஷ்ணா சாலை மற்றும் ராம தெரு சந்திக்கும் இடத்தின் அருகே இன்று (28.09.2023) காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது.
சாலையின் நடுவே 6 அடி அகலத்தில், 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனடியாக அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அந்த சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்தனர். இதனால் வாகனங்கள் வேறு வழியில் சுற்றிச் சென்றன.
டாக்டர் நாயர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதே சாலையில் ஏற்கனவே ஒருமுறை பள்ளம் ஏற்பட்டு சீர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக் கது. இந்த திடீர் பள்ளத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தரைக்கு அடியில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணியின் போது அவ்வப்போது சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்தது போது, மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கழிவுநீர் கால்வாயால் சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சென்னை தி.நகர் சாலையில் திடீர் பள்ளம்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு