சைதையில் புயல் பாதிப்பு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்

சென்னை:
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கழுத்தளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்தனர்… புயல் பாதிப்பு நீங்கி இயல்புநிலை திரும்பி வரும் நிலையில் மக்கள் உடல் நலம் கருதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்… சுமார் 12000 பேர் பயனடைந்ததாக புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் ஏராளமானோர் பங்கேற்று பலனடைந்தனர்… இதில் பங்கேற்றவர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தளபதி விஜய் அறிவுறுத்தலின்பேரில் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான புஸ்ஸி என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் விஜய் மக்கள் இயக்க சைதை பகுதி தலைவர் இ.ஜெ.ஜெ.ராம், செயலாளர் சைதை ஆ.சதிஷ், பொருளாளர் சைதை ஆர்.யுவராஜ், அமைப்பாளர் சைதை பி.தினேஷ், துணைச் செயலாளர் யாக்கோப் ஆகியோர் ஏற்பாட்டின்படி நடைபெற்றது. இதில் மாங்காடு ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னதாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சைதையில் புயல் பாதிப்பு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட