டெல்லி ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டுப்பெண் துன்புறுத்தல்: சிறுவன் உட்பட 3 பேர் கைது

புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த பெண்ணைத் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் வெளியிடுள்ள அறிக்கையில், “அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் வீடியோவில் உள்ள சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வீடியோவில் இருக்கும் சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திலோ, ஜப்பான் தூதரகத்திலோ புகார் ஏதும் தெரிவிக்காத நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருப்பவர்களின் மீது டெல்லி போலீஸ் சட்டப்படியான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் ஏதும் கொடுத்திருந்தால் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, இந்த விவகாரத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாதி மாலிவால், இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம் என்று தெரிவித்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும் பாஜக பிரமுகருமான குஷ்பு கூறுகையில், இது அருவருப்பூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பெண் துன்புறுத்தல் விவகாரம் டெல்லியிலுள்ள பகர்ஹஞ்ச் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடந்துள்ளது. சம்பவம் குறித்து அந்த பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். பின்னர் அந்த வீடியோ அழிக்கப்பட்டது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது சமீபத்திய ட்வீட்டர் பதிவில், தான் தற்போது வங்கதேசத்தில் இருப்பதாகவும் உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

டெல்லி ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டுப்பெண் துன்புறுத்தல்: சிறுவன் உட்பட 3 பேர் கைது

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்