தமிழக பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழா இன்று தொடக்கம்…

தமிழ்நாட்டில் எல்லை கடந்த பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழாவை நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான ட்ரைஃபெட் அறிவித்துள்ளது. தங்களது தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை திறனுக்காக திறமை வாய்ந்த பழங்குடி கைவினைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தோடு இந்த பிரத்யேக நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஜூலை 17 தொடங்கி 27 வரை தமிழ்நாட்டின் கோத்தகிரி, உதகமண்டலம், ஏற்காடு, கொல்லிமலை, ஏலகிரி, ஜமுனா மரத்தூர் போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். தங்களது தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை திறன்கள், பாரம்பரியங்கள் மற்றும் வியப்பூட்டும் திறமைகளை எடுத்துரைப்பதற்காக இத்திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு பன்முகப் பின்னணிகளைக் கொண்ட பழங்குடி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் துறையின் வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணையும் வாய்ப்பையும், சந்தைப்படுத்துதல் போன்ற ஆதரவையும் குழு நடைமுறை வழங்கும்.

கைத்தறி துணி வகைகள், நகைகள், மர வேலைப்பாடுகள், மண்பாண்ட பொருட்கள் மற்றும் கண்கவர் ஓவியங்கள் போன்ற ஏராளமான பழங்குடி கலைப் பொருட்கள் இந்த திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும். இது போன்ற ஒவ்வொரு தயாரிப்பும் கலைத்திறமையின் வியப்பூட்டும் கதைகளை விவரிப்பதோடு, பழங்குடி மக்களின் தனிச்சிறப்புமிக்க அடையாளத்தையும், கலாச்சார சிறப்பையும் பிரதிபலிக்கும்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

தமிழக பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழா இன்று தொடக்கம்…

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்