இல்லறவியல் – 20 அதிகாரம்
திருக்குறள் அதிகாரம்-5
இல்வாழ்க்கை
மனைவியோடு கூடிவாழும் இல்லறச் சிறப்பைக் கூறுதல்
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்ஆற்றின் நின்ற துணை
குறள் விளக்கம் : இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கின்ற ஒருவவு முந்தைய அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள கடவுள், வான். நீத்தார் ஆகிய இயல்பிலேயே இல்வாழ்வானுக்குத் துணையாயிருக்கும். மூவருக்கும் நடி வழியில் நிற்கும் துணையாக இருக்கின்றான்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யோவான்என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும்” என்றும், எசேக்கியேல் “நதியோரமாய்..அவைகளுக்கு பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிற படியால் மாதந்தோறும் புதுக் கனிகளைக் கொடுத்து கொண்டேயிருக்கும்;” எனவும் யோவான் 10:27 “என் ஆடுகள் எ சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது: நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்குப் பின் செல்கிறது” எனவும், திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்






