பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளியின் சார்பில் செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில்
நடத்தப்பட்ட ”தி சென்னை க்விஸ்” மாபெரும் வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரைப்
பாராட்டி மேயர் ஆர்.பிரியா இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரொக்கப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர்
(கல்வி) ஷரண்யா அறி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





