மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,
இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு
அவர்கள், திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-
71க்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர்
தாயகம் கவி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.31.28 இலட்சம்
மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாயவிலைக்
கடையினைத் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்
பொருட்களை வழங்கினார்.இந்தக் கட்டடம் 660 சதுர அடி பரப்பளவில் சேமிப்பு அறை மற்றும்
கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் பெரம்பூர்
ஹைரோடு பயன்பெறுவோர் கூட்டுறவு பண்டகச் சாலை நியாய விலைக் கடை
எண். 2ன் மூலமாக 1200 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா, .வி.க. நகர்
சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம் கவி (எ) சிவகுமார், மத்திய வட்டார துணை
ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டல அலுவலர் ஜி
சொக்கலிங்கம், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் செல்வகுமார்,
உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை
ஆணையர் கருணாகரன், உதவி ஆணையர் சூரிய பிரியா, மாமன்ற
உறுப்பினர்கள் புனிதவதி எத்திராஜன், மு. சரவணன்,
திரு.அம்பேத்வளவன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 40. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி .குறள்





