புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மனநல காப்பகத்தில், சரிவர கவனிக்கப்படாமல் இருந்த நபர்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின்படி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ள 50 நபர்களுக்கு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட எஸ்.ரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்று (19.07.2023) பழங்கள் மற்றும் ஆடைகள் வழங்கி, நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை தி.சி.செல்வவிநாயகம் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பார்த்தசாரதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





