மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு – மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை !

புதுச்சேரி கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டி புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே ராஜா நகரில் ஸ்ரீராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இ்ன்று காலை நடந்தது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி புதுவையில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். இதில் அருத்ததிபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகம்மாள் (வயது 68) கலந்து கொண்டார். விழாவில் கோவில் புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் கோவிலின் உள்ளே சென்று சாமிதரிசனம் செய்தனர். அப்போது நாகம்மாளும் கோவிலின் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு – மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை !

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட