ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். 

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று  அதிகாலை  5 மணி அளவில்  சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதனையொட்டி, ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில், முத்தங்கி கவச அலங்காரத்தில் பல்லக்கில் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக

ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக