வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, செகந்திராபாத், மும்பை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மும்பை பாந்த்ரா ரயில்நிலையம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு கட்டண ரயில்(09047) பாந்த்ரா ரயில்நிலையத்தில் இருந்து நாளை(ஆக.27) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- மும்பை வதோரா சிறப்பு கட்டண ரயில்(09048) ஆக.29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 5.30 மணிக்கு வதோரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

இதேபோல, செகந்திராபாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரயில்( 07125) செப்.4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07126) செப்.6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரயில்(07127) செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து செப்.8-ம் தேதி காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரயில்(07128) செப்.10-ம் தேதி வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி