80 நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருள் அனுப்பி வைத்தார்

சென்னை:
80 நரிக்குறவ குடும்பங்களுக்கு, சென்னையிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். அவர்களுடன் வீடியோ காலில் உரையாடியதில் உற்சாகம் அடைந்தனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட குன்னமஞ்சேரியில் நரிக்குறவர் காலனி உள்ளது. அங்குள்ள, ஆரணி ஆற்றங்கரையில் 80 குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி ஆற்றங்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த 80 குடும்பத்தினரும் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, புயல் கரையை கடந்து, வெள்ள நீர் வடியும் வரை அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்தது. வெள்ள அபாயம் நீங்கிய பின் 80 குடும்பத்தினரும் கிராமத்திற்குள் மீண்டும் அனுப்பி தங்க வைக்கப்பட்டனர்‌.

நரிக்குறவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செல்போனில் பேசி நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று கொண்டு 80 குடும்பத்தினருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், டி.ஜெ.கோவிந்தராசன் எம்.எம்.ஏ நேற்றுமுன்தினம் இரவு அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கினார். பொருட்களை வழங்கி கொண்டிருந்தபோது, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் செல்பேசி வீடியோ காலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பு கொண்டு நிவாரண உதவி வழங்குவதை குறித்து கேட்டறிந்தார். அப்போது பயனாளிகளான நரிகுறவர்கள், வீடியோ காலில் அமைச்சர் பேசுவதை பார்த்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம் நிவாரண பொருட்கள் வந்து சேர்ந்ததா என அமைச்சர் கேட்டார்.

அதற்கு நிவாரண பொருட்கள் பெற்று கொண்டோம் ஐயா என்று உற்சாகமாக நன்றி தெரிவித்தனர். அமைச்சர் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

80 நரிக்குறவர் குடும்பங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருள் அனுப்பி வைத்தார்

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்