சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சம்சா விற்பனை செய்யும் பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்பவர் ராஜேஸ்வரி. சுமார் 45 வயது மதிக்கத்தக்க இவர் தனது பணியை முடித்துவிட்டு கடற்கரை– & தாம்பரம் ரயிலில் ஏறி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார். அதே ரயிலில் ராஜேஸ்வரியுடன் இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ராஜேஸ்வரி இறங்கும் நேரம் பார்த்து அவரை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அதே ரயிலில் அங்கிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயங்களோடு துடித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை ரயில்வே போலீசார் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரவு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இரவு முழுக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின் காதல் அல்லது பண விவகாரம் காரணமாக இருக்கலாமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





