மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (24.7.23) தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு,ஆய்வகம்,நோயாளிகளுக்கு உணவு விநியோகிக்கும் முறை,தீவிர நுரையீரல் நோய் பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் சண்முககனி மருத்துவமனை கண்காணிப்பாளர் இரமேஷ், நிலைய மருத்துவ அலுவலர் இராதிகா பொதுப்பணித்துறை அலுவலர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள் உடன் இருந்தனர்.