சென்னை : சர்வாதிகாரியால் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியை பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். கிழக்கு இந்திய கம்பெனி, இந்திய முஜாஹிதீனில் கூட I.N.D.I.A.இருப்பதாக அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, I.N.D.I.A. கூட்டணி விவகாரத்தில் பிரதமர் மோடி விரக்தியில் உள்ளதாக கூறியுள்ளார்.
சர்வாதிகாரியால் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விமர்சித்து உள்ளார். மேலும் அவர் பேசுகையில்,”மணிப்பூரில் மனிதர்களை மனிதர்கள் எரித்துக் கொள்கிறார்கள்.பெண்களை நிர்வாணப்படுத்துகிறார்கள். ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். எந்த காட்டு மிராண்டி சமுதாயத்தில் இது நிகழும் எங்குமே இது போன்று நிகழாது,”என்று தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி ஆதரவளிப்பதாக உள்ளார் என்றும் அவர் கூறினார்.






