ஏற்றுமதி தடையால் 2,500 டன் அரிசி தேக்கம்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, களம்பூர் என்றாலே அரிசிக்கு பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணி மற்றும் களம்பூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 80 அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பொன்னி, பிடிடி, சோனா டீலக்ஸ், ஐ.ஆர் 50, ஐ.ஆர் 20 உள்ளிட்ட பல ரக அரிசிகள் உற்பத்தி செய்யபடுகின்றன. நாள் ஓன்றுக்கு ஆரணி பகுதியில் மட்டும் 5 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், கோவை உள்ளிட நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து மட்டும் 20 சதவீத அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 5 சதவீதம் ஆரணியில் இருந்து ஏற்றுமதியாகிறது. சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஆரணி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது உள்நாட்டு நெல் அரிசி உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைவானதாலும் அரிசி உற்பத்தி மிகவும் பாதிக்கபட்டுள்ளதால் வெளிநாட்டு அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது. ஏற்றுமதி தடை செய்யபட்டதால் அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிகள் ஆலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:- ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆரணி, களம்பூரில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கடந்த ஒருவாரத்தில் 5சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தொழில் முழுமையாக பாதிக்கும். அரிசி மூட்டைகள் தேங்கியுள்ளதால் விலை குறைய வாய்ப்புள்ளது. மற்றும் சீராக இருக்கும். அரிசி ஆலைகளுக்கு மின் கட்டணம் மானியம் வழங்க வேண்டும் அரசு விதித்த ஜி.எஸ்.டி 5 சதவீதத்தை முற்றிலும் அகற்றி மானியம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து ஆரணி பகுதி விவசாயிகள் கூறுகையில்:- அரிசி ஆலைகள் தொடர்ந்து உற்பத்தியை குறைத்தால் நெல் மூட்டைகள் தேங்கும். நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படும். ஏற்றுமதிக்கு தடைநீங்கும் வரை நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதில் பெரும் பிரச்சனை ஏற்படும். மேலும் நெல் விலையும் குறையும், விவசாயம் சம்பந்தபட்ட மூல பொருட்களான பொட்டாசியம், யூரியா உள்ளிட்ட பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். நாடு ஒருபோதும் அரிசி நெருக்கடியை சந்திக்காது. விவசாயிகள் நெருக்கடியை சந்திக்க வேண்டும். அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

ஏற்றுமதி தடையால் 2,500 டன் அரிசி தேக்கம்..

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை