அகர்தலா:
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பாஜக கூட்டணி அபார வெற்றிபெற்றது. 32 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனிடையே, கடந்த முறை திரிபுரா முதல்வர் மாணிக் சகா மீண்டும் 2வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மற்றொரு பாஜக மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்வருமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகின. இதனால் திரிபுரா பாஜகவில் குழப்பம் நீடித்து வந்தது.
இதையடுத்து, பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர். இவர்கள் தலைமையில் திரிபுரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிபுரா முதல்வராக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சை குழப்பம் முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் திரிபுராவின் முதல்வராக 2வது முறையாக மாணிக் சகா பதவியேற்றுக்கொண்டார். அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் மாணிக் சகா பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைவ்வர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பலரும் கலந்துகொண்டனர். ரத்தன் லால் நாத், பிரணாஜித் சிங்கா ராய், சந்தனா சக்மா மற்றும் சுஷந்தா சவுத்ரி ஆகியோர் திரிபுரா மாநிலத்தின் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 40. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி .குறள்





