சமையலுக்கு தக்காளியை பயன்படுத்த தடை விதித்த ஆளுநர்

ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாயைத் தொடும் நிலையில், ராஜ்பவனில் சமையலில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடை விதித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் பெய்த கனமழையே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், சந்தைப்படுத்துதல், பதுக்கல் காரணமாக செயற்கையாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் தக்காளி விலை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை விரைவில் 300 ரூபாயாகும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த தடை விதித்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மற்றும் சண்டிகரில் வசிப்பவர்கள் கடந்த சில வாரங்களாக தக்காளி விலையில் அசாதாரணமான உயர்வை எதிர்கொள்கின்றனர், இதனால் தக்காளியை பயன்படுத்தும் குடும்பங்கள் கவலையடைந்துள்ளன.
காய்கறி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். ஒரு பொருளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அல்லது தவிர்ப்பதன் மூலம், அதன் தேவை இயல்பாகவே குறையும். இது அதன் விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்குப் பங்களிக்கும் வகையில், தற்காலிகமாக தங்கள் வீடுகளில் மாற்று வழிகளை ஆராய மக்களை ஊக்குவிக்கிறேன். ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்துவதைத் தவிர்க்க வலியுறுத்தியுள்ளேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

சமையலுக்கு தக்காளியை பயன்படுத்த தடை விதித்த ஆளுநர்

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்