இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலம், மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாட்டினை இன்று (28.08.2023) ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





