16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று (குறள்: 157)
விளக்கம்:
செய்யத்தகாத கொடிய செயலைத் தனக்குப் பிறர் செய்த போதிலும் அந்தச்
செயலின் நிமித்தம் அந்தச் செயலைச் செய்தவர்க்கு வரப்போகும்
துன்பத்திற்கான உள்ளம் நொந்து அறமல்லாத காரியத்தைச் செய்யாதிருப்பதே
என்றும் நலம் பயக்கும்.







