‘இந்தியா” கூட்டணி மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியது..

ஒன்றிய பா.ஜ.க அரசை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ‘இந்தியா‘ கூட்டணியை அமைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த 2-வது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டத்தை 2 நாட்கள் மராட்டிய தலைநகர் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்துக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மராட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாடி’ ஏற்பாடு செய்தது. பாட்னா மற்றும் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது பலத்தை காட்டுவதிலேயே தீவிரம் காட்டின. ஆனால் மும்பை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முக்கிய முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பைக்கு வர தொடங்கினர். நேற்று ஏராளமான தலைவர்கள் வந்தனர். எதிர்க்கட்சி தலைவர்களின் வருகையால் மும்பை நகரம் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து மாலையில் மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள ‘கிராண்ட் ஹயாத்’ நட்சத்திர ஓட்டலில் கூட்டம் தொடங்கியது. மாலை 6 மணி முதல் தலைவர்கள் ஓட்டலில் கூட்டம் நடைபெறும் மாநாட்டு அரங்கிற்கு வரத் தொடங்கினர்.28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் இடம் பெற்றுள்ளனர். சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

‘இந்தியா” கூட்டணி மு.க ஸ்டாலின் உள்பட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியது..

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு