சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:-
“சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உத்திசார் கூட்டு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”







