உயிருக்கு போராடிய மாணவருக்கு உடனடி சிகிச்சை – அரசு பொது மருத்துவமனைக்கு பாராட்டு…

சென்னை சைதாப்பேட்டை கோ்ட் அருகே இன்று காலை 19-A மாநகர பேருந்தில் பயணம் செய்த சாருகேஷ் (18) தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சக மாணவர்கள் மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது. மேல் சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தனர். ஆனால் வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

அப்பொழுது அங்கு சென்ற நமது தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவர் இராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டார். இதை தொடர்ந்து நமது ஆசிரியா் இராயப்பேட்டை மருத்துவமனை இயக்குனரும் கண்காணிப்பாளருமான மணி இராஜகோபாலுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் மாணவருக்கு உடனடியாக தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டு CT Scan எடுக்கபட்டது. இதனை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவை கண்காணிப்பாளர் மணி இராஜகோல் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு நமது ஆசிரியா் கண்காணிப்பாளர் மணி இராஜகோபாலை தொடர்புகொண்டபோது மாணவர்
நலமாக உள்ளார் என்று தெரிவித்தார். அவருக்கு தகவல் எக்ஸபிரஸ், பொதுமக்கள், மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கபட்டது.

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

உயிருக்கு போராடிய மாணவருக்கு உடனடி சிகிச்சை – அரசு பொது மருத்துவமனைக்கு பாராட்டு…

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு