கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் மதுகிரி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அவர் தெரிவித்ததாவது. இதற்கு முன்பு இருந்த அரசு இலவச அரிசியை 5 கிலோவாக குறைத்தது. ஆனால், நான் தேர்தலுக்கு முன்னர் கூறும்போது, 5 கிலோவுக்கு கூடுதலாக நான் மக்களுக்கு அரிசியை வழங்குவேன் மற்றும் நீங்கள் என்ன பெறுகின்றீர்களோ அதனை விட கூடுதலாகவே நான் வழங்குவேன் என கூறியிருந்தேன். அன்ன பாக்கிய திட்டத்திற்காக, இந்திய உணவு கழகத்திடம் நாங்கள் கடிதம் எழுதி இருந்தோம். அரிசியை அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இருந்தோம். அவர்களும் அரிசியை வழங்க தயாராக இருக்கிறோம் என உறுதி அளித்து இருந்தனர். ஆனால், எங்களுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. உண்மையாகவே பா.ஜ.க. ஏழைகளுக்கு ஆதரவானவர்களா? அவர்கள் ஏழைகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. நாங்கள் அரிசியை இலவசத்திற்கு கேட்கவில்லை. ஒரு கிலோவுக்கு ரூ.36 வரை பணம் கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனால், அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என நீங்களே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுவதில்லை. அவர்களின் இரக்கமற்றவர்களாக உள்ளனர் என கா்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





