ஜோகோவிச் சாம்பியன் : யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அசத்தல்.

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய நாட்டை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்தார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெத்வதேவுடன் (27 வயது, 3வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (36 வயது, 2வது ரேங்க்) 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று யுஎஸ் ஓபன் கோப்பையை 4வது முறையாக கைப்பற்றினார்.

இப்போட்டி 3 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றி மூலம், ஆஸி. வீராங்கனை மார்கரெட் கோர்ட் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று படைத்த சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். ஆண்கள் பிரிவில் அவர் ஏற்கனவே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (22 பட்டங்கள்), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் (20) அடுத்த இடங்களில் உள்ளனர். ஒரு சீசனில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் சாதனையை 4 முறை நிகழ்த்திய (2011, 2015, 2021, 2023) முதல் வீரர் என்ற பெருமையும் ஜோகோவிச்சுக்கு கிடைத்துள்ளது.

10 முறை யுஎஸ் ஓபன் பைனலில் விளையாடி உள்ள அவர், அதில் 4 முறை கோப்பை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்ட் – வேரா ஸ்வோனரேவா (ரஷ்யா) ஜோடியுடன் மோதிய எரின் ரவுட்லிப் (நியூசி.) – கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) இணை 7-6 (11-9), 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 14 நிமிடங்களுக்கு நீடித்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜோகோவிச் சாம்பியன் : யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அசத்தல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.