பெண் வழக்கறிஞர் அளித்த புகாரில் விசிக பிரமுகர் விக்ரமன் மீது வழக்கு பதிவு…

சென்னை:
பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், பொருளை பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் விக்ரமன் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் 13-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், லண்டனில் ஆய்வுப் பட்டம் மேற்கொண்டு வருபவரான பெருங்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செய்தி தொடர்பாளரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான விக்ரமனுடன் (35) சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு நாளடைவில் நெருக்கமாக மாறியது. இந்நிலையில், அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி படிப்படியாக ரூ.13 லட்சம் வரை பெற்றுக் கொண்டார். மேலும், அவருக்கு உயர்ரக லேப்டாப், செல்போன்கள்கூட வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அனைத்தையும் பெற்றுக் கொண்ட அவர் பின்னர் என்னை முழுமையாக நிராகரித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் காலம்தாழ்த்தி ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து கேட்டபோது சாதி பெயரை கூறி திட்டினார். எனவே, பணம், பொருட்களை பெற்றுக்கொண்டு, பழகிய பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி மேலும் மோசடி செய்த விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார். முன்னதாக இதேபோன்று விசிக தலைமை அலுவலகத்துக்கும் அப்பெண் கடிதம் எழுதினார். ஆனால், விக்ரமன் மீது கட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து அப்பெண் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், அப்பெண்ணுடன் நட்புடன்தான் பழகினேன் என்றும், யாரையும் ஏமாற்றவில்லை என்றும் விக்ரமனும் விளக்கம் அளித்திருந்தார். போலீஸார் விக்ரமன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் நீதிமன்றம் சென்றார். உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தற்போது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விக்ரமன் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 13-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். இதனால், அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

பெண் வழக்கறிஞர் அளித்த புகாரில் விசிக பிரமுகர் விக்ரமன் மீது வழக்கு பதிவு…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்