கொசுக்கள் உற்பத்தி தமிழகத்தில் அதிகரித்துள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

மதுரை:
“தமிழகத்தில் தொழில்கள் உற்பத்தி இல்லை; ஆனால், கொசுக்கள் தான் அதிகரித்துள்ளது” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்ம நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, கீழப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் தொழில்கள் உற்பத்தி இல்லை. ஆனால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசுக்களால் சிக்குன் குனியா, டெங்கு போன்ற மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே சக்தி வாய்ந்த மருந்துகள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கொசுக்களை கட்டுப்படுத்த நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என நீதிமன்றமும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது தமிழக சுகாதாரத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற விசாரணையில் கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் சில பூச்சிக்கொல்லி மருந்து ரசாயனங்களால் வேறு நோய்கள் பரவுகின்றன. இந்த அச்சுறுத்தலிருந்து மக்களை பாதுகாக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத கொசுமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, அவற்றை உண்ணும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் உயிர்க்காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளதாக அரசு தரப்பில் கூறியுள்ளது. இருந்தாலும், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய்கள் பரவுகின்றது. தமிழகத்தில் நாங்கள் தொழில் புரட்சியை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே என்னவென்றால், கொசுக்கள்தான் உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும், பருவ மழையால் நோய் பரவல் பெருகியுள்ளது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்த தவறவிட்டால் மரணம் போன்ற நிகழ்வு ஏற்படும். எனவே உற்பத்தியாகும் கொசுக்களை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அரசு தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறினார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கொசுக்கள் உற்பத்தி தமிழகத்தில் அதிகரித்துள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு