தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-8, 108-வது வார்டு, சேத்துப்பட்டு, பிருந்தாவனம் குறுக்கு தெருவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மேயர் ஆர்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை சேர்ந்த சுதாகர், குறளரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






